ஒடிசா ரயில் விபத்துக்குள்ளான குடும்பங்களுக்கு உதவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது ஊதியத்தில் ஒரு பகுதியை நிவாரணத்து நன்கொடையாக வழங்குமாறு பாஜக எம்.பி. வருண் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ஒடிசாவில் நேற்றிரவு அடுத்தடுத்த மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 280-ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதுகுறித்து பாஜக வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கியர்களுக்கு முதலில் நாம் ஆதரவு தர வேண்டும். உறவுகளை இழந்துவாடும் மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், நாம் அனைவரும் முன்வந்து அவரவர் ஊதியத்தின் ஒரு பகுதியை ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நேற்று நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.