இந்தியா

ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமரிடமும், ரயில்வே அமைச்சரிடமும் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன: காங்கிரஸ்

DIN

ஒடிசா  ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் நிறைய கேள்விகள் கேட்க உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்பது மற்றும் மற்றும் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்ற உடனடி பணிகளுக்குப் பின்பு இந்த கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசாவில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்துகளில் இதுவும் ஒன்று. இந்த தருணத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்யுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒடிசா விரைந்துள்ளனர். மேலும், பலரும் ஒடிசாவுக்கு செல்ல உள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியிடமும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் கேட்பதற்கு எங்களிடம் நிறைய கேள்விகள் உள்ளன. விபத்தில் சிக்கியவர்களை மீட்பதே உடனடி கடமையாகும் எனக் கூறப்பட்டுள்ளது. 

ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில் இதுவரை குறைந்தது 261 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கிட்டத்தட்ட 1000 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ் மொழிக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கு.மு. அண்ணல் தங்கோ: பழ.நெடுமாறன் புகழாரம்

மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு எங்கே அனுமதி பெறலாம்? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

கேரளத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

SCROLL FOR NEXT