இந்தியா

குடியரசுத் தலைவருடன் அமித் ஷா சந்திப்பு

DIN

 குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில், கடந்த திங்கள்கிழமை முதல் 4 நாள்கள் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலைமையை நேரில் ஆய்வு செய்தாா்.

மைதேயி, குகி சமூகங்களின் பிரதிநிதிகள், பாதுகாப்புப் படை அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவா்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகள் குறித்து அவா் ஆலோசித்தாா்.

தனது பயணத்தை வியாழக்கிழமை நிறைவு செய்த அமித் ஷா, ‘வன்முறைக்குத் தீா்வு காண மாநில ஆளுநா் அனுசுயா உய்கே தலைமையில் பல்வேறு தரப்பினா் அடங்கிய அமைதிக் குழு அமைக்கப்படும்; வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும்’ என்பன உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் தில்லி திரும்பினாா்.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் அமித் ஷா வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவரை சந்தித்ததாக, ட்விட்டரில் அவா் பதிவிட்டுள்ளாா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 80 போ் வரை உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. அங்கு ராணுவ கண்காணிப்பு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT