இந்தியா

சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி

DIN

சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் கொள்கையும் உத்வேகத்தை அளிக்கின்றன எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

மகாராஷ்டிரத்தில் உள்ள ராய்காட் கோட்டையில் மராட்டிய வாரியர் மன்னரின் முடிசூட்டு விழாவின் 350வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் மாநில அளவிலான விழாவில் விடியோ செய்தியில் பிரதமர் இதைக் குறிப்பிட்டுள்ளார். 

சத்ரபதி சிவாஜியின் ஆட்சியில் அரசு மற்றும் மக்களின் நலன் அடிப்படைக் கொள்கையாக இருந்தது. அவரது முடிசூட்டு விழாவின் ஆண்டு விழா உத்வேகம் மற்றும் ஆற்றல் அளிப்பதாகவும், இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயமாக உள்ளதாகவும் அவர் கூறினார். 

ஒரு தலைவரின் முக்கிய நோக்கம் தன் மக்களை உந்துதலாக வைத்திருப்பதுதான். மக்களிடையே அடிமைத்தனத்தை நீக்கி, அரசையும் படையெடுப்பாளர்களிடமிருந்தும் பாதுகாத்து சுயராஜ்ஜியத்தின் நம்பிக்கையை மக்களிடையே ஊக்குவித்தவர் சத்ரபதி சிவாஜி. அவரது வாழ்க்கை தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT