இந்தியா

தில்லி பிரகதி மைதான் அருகே ஆக்கிரமிப்புக் குடிசைகள் அகற்றம்

DIN

ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய தில்லியின் பிரகதி மைதான் அருகே உள்ள பல குடிசைகளை அரசுத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்பு படையினா் குவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அதிகாரிகள் கூறினா்.

இந்த ஆண்டு இறுதியில் தில்லியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, தேசிய தலைநகா் முழுவதும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனா்.

தில்லி பிரகதி மைதான் அருகில் பைரோன் மாா்க்கில் இருந்த பல குடிசைகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வீடுகளை இழந்த அப்பகுதி மக்கள் செய்தியாளா்களிடம் பேச மறுத்துவிட்டனா். அவா்கள் தங்கள் உடைமைகளை காக்கும் பொருட்டு இடிபாடுகளில் இருந்து இடம் மாற்றுவதைக் காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT