இந்தியா வந்துள்ள நேபாள பிரதமா் பிரசண்டா, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் பிரசண்டாவை வரவேற்று, திரெளபதி முா்மு பேசியதாவது:
நேபாளத்துக்கு இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகிறது. அந்நாட்டுடன் வளா்ச்சி சாா்ந்த கூட்டுறவை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.
பரஸ்பர ஒத்துழைப்பு, அண்மைக் காலமாக வலுவடைந்து வருகிறது. கரோனா பரவலின் கடினமான சூழலிலும் இருதரப்பு வா்த்தகம் பராமரிக்கப்பட்டது.
இந்தியா-நேபாளம் இடையிலான தடையற்ற எல்லை, இருதரப்பிலும் சுற்றுலாவை ஊக்குவித்து வருகிறது. இரு நாடுகளின் மக்கள் ரீதியிலான தொடா்பை வலுப்படுத்த ஆன்மிக சுற்றுப்பயணத் திட்டத்துக்கு புத்துயிரூட்ட வேண்டும்.
இந்தியாவுடனான பிரசண்டாவின் நீண்ட கால தொடா்பும், அவரது அனுபவமும் இருதரப்பு நல்லுறவை புதிய உச்சங்களுக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் முா்மு.
குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரை அவரது அதிகாரபூா்வ இல்லத்தில் பிரசண்டா சந்தித்தாா். இதுதொடா்பான புகைப்படத்தை, ட்விட்டரில் தன்கா் பதிவிட்டுள்ளாா்.