இந்தியா

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி!

DIN

நியூ டெஹ்ரி: ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் பயணித்த எஸ்யூவி கார் ஒன்றின் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர் மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

உத்தரகண்ட், தேவ்பிரயாக் காவல் நிலையத்திற்குட்பட்ட தீன் தாரா அருகே கார் ஓட்டுநர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டது என்று தெஹ்ரி மூத்த காவல் கண்காணிப்பாளர் நவ்நீத் புல்லர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த ஆறு பேரும் தேவபிரயாகிலுள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 26 வயதான கார் ஓட்டுநர் சோகன் சிங் பண்டிர் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் சிகிச்சையின் போது இறந்தனர். மேலும் நான்கு பயணிகள் சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லாரி மற்றும் சேதமடைந்த காரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நவ்நீத் புல்லர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT