இந்தியா

ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை மூடல்!

DIN

பனிஹால்: ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் சாலை சீரமைப்பு பணிகளுக்காக ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

காஷ்மீரை மற்ற நாட்டுடன் இணைக்கும் 270 கி.மீ நெடுஞ்சாலையில் நிலச்சரிவு, பனிப்பொழிவு போன்றவை அடிக்கடி நிகழ்கிறது. 

இந்நிலையில், ராம்பன் மாவட்டத்தில் தல்வாஸ் பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டதால், அப்பகுதியின் சாலைகள் கற்களால் மூடப்பட்டுள்ளது. இதனை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 

இதனால், ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT