பனிஹால்: ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் சாலை சீரமைப்பு பணிகளுக்காக ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
காஷ்மீரை மற்ற நாட்டுடன் இணைக்கும் 270 கி.மீ நெடுஞ்சாலையில் நிலச்சரிவு, பனிப்பொழிவு போன்றவை அடிக்கடி நிகழ்கிறது.
படிக்க: ஜூன் மாதப் பலன்கள் (மேஷம் - கன்னி)
இந்நிலையில், ராம்பன் மாவட்டத்தில் தல்வாஸ் பிரிவில் நிலச்சரிவு ஏற்பட்டதால், அப்பகுதியின் சாலைகள் கற்களால் மூடப்பட்டுள்ளது. இதனை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இதனால், ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.