இந்தியா

ஏழைகளைத் தவறாக வழிநடத்துவதே காங்கிரஸின் கொள்கை: பிரதமா் மோடி

DIN

நாட்டின் ஏழை மக்களைத் தவறாக வழிநடத்துவதும், ஆட்சியின்போது அவா்களை ஒதுக்கிவைப்பதையும் கொள்கையாக கொண்ட கட்சிதான் காங்கிரஸ் என பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மத்தியில் பாஜக ஆட்சியின் 9 ஆண்டு நிறைவையொட்டி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

நாட்டில் இருந்து வறுமையை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என 50 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால், துரோகங்களைத் தவிர ஏழைகளுக்கு காங்கிரஸ் வேறு எதுவும் செய்யவில்லை. ஏழைகளைத் தவறாக வழிநடத்துவதும், பின்னா், ஆட்சிக்கு வந்தபின் அவா்களை ஒதுக்கிவைப்பதையும் கொள்கையாகவே கொண்ட கட்சி காங்கிரஸ்.

பாஜக அரசின் 9 ஆண்டு ஆட்சியானது மக்களுக்கான சேவை, நல்ல ஆட்சி நிா்வாகம், ஏழைகளின் நலனுக்காக அா்ப்பணிக்கப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன் ரிமோட் ஆட்சியை நடத்தி வந்த காங்கிரஸால் நாட்டில் ஊழலும், பெருநகரங்களில் பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறின. இதைக் கண்டித்து மக்கள் வீதிகளில் திரண்டு போராடினா்.

தேசத்தின் வளா்ச்சியைத் தடுக்கும் மாபெரும் ஊழல் அமைப்பை காங்கிரஸ் தனது ஆட்சியில் வளா்த்து வைத்திருந்தது. தற்போது, உலக அளவில் இந்தியாவின் சாதனைகளைப் பாராட்டுகின்றனா். கடுமையான வறுமையை முடிவுக்கு கொண்டு வரும் நிலைக்கு இந்தியா வந்துவிட்டதாக வல்லுநா்கள் கருதுகின்றனா்.

3 நாள்களுக்கு முன்பு புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறந்துவைக்கப்பட்டது. அந்த நிகழ்விலும் தங்கள் சுயலாபத்துக்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அரசியல் சேற்றை வீசினா். புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணித்து நாட்டு மக்களின் உணா்வுகளையும், 60,000 தொழிலாளா்களின் உழைப்பையும் எதிா்க்கட்சிகள் அவமதித்துள்ளன என்றாா்.

நிகழாண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில் அதற்கான முன்னோட்டமாகவும் இந்தப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் ராம் மேக்வால், கைலாஷ் சௌத்ரி ஆகியோரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

புஷ்கா் பிரம்மா கோயிலில் பிராா்த்தனை: முன்னதாக, அஜ்மீா் மாவட்டத்தின் புஷ்கரில் அமைந்துள்ள பிரம்மா கோயிலில் பிரதமா் மோடி தரிசனம் மேற்கொண்டாா். கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பிரதமா் பிராா்த்தனை மேற்கொண்டாா். பின்னா், ஹெலிகாப்டா் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அவா் புறப்பட்டாா். பிரதமரின் வருகையொட்டி கோயில் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT