இந்தியா

29% வளா்ச்சி கண்ட கோதுமை ஏற்றுமதி

DIN

இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி கடந்த ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் 29.29 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நாட்டின் கோதுமை ஏற்றுமதி 150 கோடி டாலராக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 29.29 சதவீதம் அதிகமாகும். அப்போது கோதுமை ஏற்றுமதி 117 கோடி டாலராக இருந்தது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருந்தாலும், சில நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவையைக் கருதி, அந்த நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக அனுமதிக்கப்படுகிறது.

2022-ஆம் ஆண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியும் 39.26 சதவீதம் அதிகரித்து 287 கோடி டாலராக உள்ளது. பாஸ்மதி அல்லாத மற்ற ரகங்களின் ஏற்றுமதி 5 சதவீதம் அதிகரித்து 420 கோடி டாலராக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT