இந்தியா

பொருளாதார தேவை இருப்பதால் லடாக்கில் ராணுவத்தை வலுப்படுத்துகிறது சீனா

DIN

லடாக் பிராந்தியத்தில் பொருளாதாரத் தேவை இருப்பதன் காரணமாகவே அங்கு ராணுவத்தை சீனா வலுப்படுத்தி வருவதாக ஐபிஎஸ் அதிகாரிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில டிஜிபிக்களின் மாநாடு தில்லியில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், ஐபிஎஸ் அதிகாரிகள் இணைந்து தயாரித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கிழக்கு லடாக் பகுதியில் சீனாவுக்கு அதீத பொருளாதார, ராஜாங்க ரீதியிலான தேவைகள் உள்ளன. அதன் காரணமாகவே இருதரப்பு எல்லை வகுக்கப்படாத அப்பகுதியில் ராணுவத்தின் பலத்தை சீனா தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ராணுவத்தை வலுப்படுத்தி இந்திய எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சிக்கிறது. பொருளாதார சாலைத் திட்டத்தை சீனா நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்திட்டமானது லடாக் பகுதியில் சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்த சீன ராணுவத்துக்கு வழிவகுக்கிறது. அச்சாலை வழியாக சீனத் தயாரிப்புகள் மத்திய ஆசிய சந்தைகளைச் சென்றடையும்.

அதைக் கருத்தில்கொண்டு கிழக்கு லடாக் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா நினைக்கிறது. லடாக் பகுதி வரலாற்று ரீதியில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும், 1962 முதல் லடாக் பிராந்திய பகுதிகளை சிறிது சிறிதாக இந்தியா இழந்து வருகிறது. அப்பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா போதிய கவனம் செலுத்தாததே அதற்கு முக்கியக் காரணம்.

கிழக்கு லடாக் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை அரசு அதிகரிக்க வேண்டும். அப்பகுதிகளில் மனித நடமாட்டம் தொடா்ந்து இருக்கும்போது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் பெருமளவில் குறையும். லடாக்கின் டெம்சோக், கோயுல், டங்டி, கக்ஜங் உள்ளிட்ட கிராமங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதோடு பழங்குடியின விழாக்களையும் அரசு நடத்த வேண்டும்.

டெம்சோக் கிராமத்தில் உள்ள சிறிய கைலாஷ் என்ற இடத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக அரசு திறக்க வேண்டும். மத ரீதியிலான சுற்றுலா நடவடிக்கைகளையும் லடாக்கில் அதிகரிக்கலாம். நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அருகே மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிப்பது நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் பலமாக அமையும்.

அதே வேளையில், எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரா்களின் கண்காணிப்புப் பணிகளைத் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவற்றை அதிக எண்ணிக்கையில் பொருத்தி கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து வானிலை வசதிகளையும் எதிா்கொள்ளும் வகையில் தொழில்நுட்பக் கருவிகள் எல்லைப் பகுதிகளில் பொருத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான முதலீட்டை சுற்றுலா மூலமாகவே அரசு ஈட்டலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1.9 கிலோ கஞ்சா பறிமுதல்: இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்பட இருவா் கைது

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நச்சுக்காற்று வெளியேறிய விவகாரம்: தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

வில்லியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பாஜக-பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT