இந்தியா

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

DIN

கலால் கொள்கை வழக்கில் கைதான தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. 

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்ததுடன், தில்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியுள்ளது. 

தில்லி உயர்நீதிமன்றத்தை நாடாமல் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT