வடகிழக்கு மாநிலங்களான மேகாலயத்தில் 63.91 சதவீதமும், நாகாலாந்தில் 72.99 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இரு மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயத்தில், சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளா் மரணமடைந்ததால், 59 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.
இதேபோல் 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளா் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், 59 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் மேகாலயத்தில் 63.91 சதவீதமும், நாகாலாந்தில் 72.99 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.