புது தில்லி: நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,781 ஆக குறைந்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
நாட்டில் புதிதாக 109 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,83,748 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இறந்தோரின் எண்ணிக்கை 5,30,748 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,781ஆக உள்ளது.
தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,51,219 ஆகப் பதிவாகியுள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220,61 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.