ஆந்திரத்தின் காக்கிநாடா அருகே ஆயில் டேங்க்கை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
மெத்தாபுரம் அருகே ரங்கப்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் தொழிற்சாலையில் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர்.
எண்ணெய் தொழிற்சாலையில் உள்ள டேங்கின் கசடுகளை சுத்தம் செய்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.