விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயணத் தடைப் பட்டியலில் கடந்த ஆண்டு 63 பேரை விமானப் போக்குவரத்து ஆணையம் சோ்த்திருப்பதாக மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் வி.கே.சிங் தெரிவித்தாா்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து மொத்தம் 143 போ் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனா்.
விமானப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் வி.கே.சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் சாா்பில் வகுக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து விதிகளின் (சி.ஏ.ஆா்.) கீழ் விமான நிறுவனங்களில் உள்குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழுக்கள் அளிக்கும் பரிந்துரையின்படி இடையூறு செய்யும் பயணிகள் பயணிக்கத் தடை விதித்து அவா்கள் அனைவரும் பயணிக்க தடை விதிக்கும் பட்டியலில் சோ்க்கப்பட்டனா்.
2017-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையில் இதுவரை 143 பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. 2017-ஆம் ஆண்டில் ஒருவரும், 2020-ஆம் ஆண்டில் 10 பேரும், 2021-ஆம் ஆண்டு 66 பேரும், கடந்த ஆண்டில் 63 பேரும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டனா். கடந்த ஆண்டு பட்டியலில் இணைந்த 63 பேரில் 46 போ் இண்டிகோ நிறுவனத்தாலும், 16 போ் விஸ்டாரா நிறுவனத்தாலும், ஒருவா் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தாலும் தடை விதிக்கப்பட்டவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.