இளைஞர்களிடையே புகை பிடித்தல், மதுப் பழக்கம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 450 ஆண்டுகளாக மது, புகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள தேனூர் கிராமம்தான் அது!
இதையும் படிக்க | போர் வீரர்களை உருவாக்கி அனுப்பும் கிராமம்!
சோழவந்தான் அருகே வைகை ஆற்றங்கரையில் உள்ள தேனூரில் 3,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 450 ஆண்டுகளுக்கும் மேலாகப் புகை பிடித்தலுக்கும் மது அருந்துதலுக்கும் தடை அமலில் உள்ளது.
66 வயதான அந்த கிராமத்தைச் சேர்ந்த பி.செல்லம் கூறும்போது, இந்த கிராமம் சுந்தர்ராஜன் பூமி, கள்ளழகர் (விஷ்ணு) தேசம். கடவுளுக்கு எங்களுடைய பக்தி மரியாதையைக் காட்ட இங்கு சிகரெட், மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது நமது பழங்கால மரபுகளையும் மதிக்கும் ஒரு வழி என்றார்.
மேலும், கள்ளழகருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்த கிராமத்தில் வசிக்கும் பலரும் பாதணிகளை அணிவதைத் தவிர்த்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ஒவ்வொரு குழந்தைக்கும் அடையாளமாகத் தனி மெட்டு! எங்கே தெரியுமா?