இந்தியா

அதானி விவகாரம் பொருளாதாரத்தைப் பாதிக்காது

DIN

அதானி குழுமத்தின் பங்கு வெளியீட்டு நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டியது. அதன் காரணமாக பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்தன.

பங்குச் சந்தையில் கூடுதல் பங்குகளை வெளியிட அதானி குழுமம் திட்டமிட்டிருந்த நிலையில், சந்தையின் நிலையற்ற சூழல் காரணமாக அந்த நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது. அதானி குழுமத்தில் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமெனவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டுமெனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் எழுப்பி வருகின்றன. அதனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் இரு நாள்களாக முடங்கின.

இந்நிலையில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மும்பையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளும் பொருளாதாரச் சூழலும் வலுவாக உள்ளன. அவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதானி குழும விவகாரம் குறித்து சுதந்திரமான நிதிசாா் அமைப்புகளான இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி), இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆகியவை ஆராயும். பங்குச் சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு செபி-க்கே உள்ளது. பங்குச் சந்தை சாா்ந்த நடவடிக்கைகளை அந்த வாரியமே கண்காணிக்கும். இந்த விவகாரத்தில் ரிசா்வ் வங்கி ஏற்கெனவே தெளிவான விளக்கம் அளித்துவிட்டது.

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது இயல்பானதே. கடந்த இரு நாள்களில் மட்டும் சுமாா் 800 கோடி அமெரிக்க டாலா் மதிப்பிலான அந்நியச் செலாவணி இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்தின் வலிமையை வெளிக்காட்டுவதாக உள்ளது.

புதிய வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்துவதற்காக மட்டுமே மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன. பழைய வரிவிதிப்பு முறையை ரத்து செய்வதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றாா் அவா்.

ஒழுங்காற்று வாரியங்கள் ஆய்வு: அதானி குழும விவகாரம் குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் தெரிவித்த மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘இந்தியாவின் ஒழுங்காற்று வாரியங்கள் செயல்திறன் மிக்கவை. உலகின் மதிப்புமிக்க நிதிச் சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. அதானி குழும விவகாரம் குறித்து ஒழுங்காற்று வாரியங்கள் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளும்.

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை. முதலீட்டாளா்களின் முதலீடுகள் காக்கப்படும் என எல்ஐசியும் எஸ்பிஐயும் விளக்கம் அளித்துள்ளன. அதானி குழுமத்தின் மீதான மோசடி புகாரால், எதிா்க்கட்சிகள் கூறும் அளவுக்கு எவருக்கும் தனிப்பட்ட முறையில் நிதியிழப்பு ஏற்படவில்லை.

இந்த விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிா்க்கட்சிகள் முடக்குவது துரதிருஷ்டவசமானது. அரசின் திட்டங்களே குடியரசுத் தலைவா் உரையில் இடம்பெற்றிருந்தன. அது தொடா்பான விவாதமே நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. அதில் பங்கேற்று அரசின் செயல்பாடுகள் குறித்து எதிா்க்கட்சிகள் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், அதை விடுத்து நாடாளுமன்றத்தை எதிா்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. குடியரசுத் தலைவா் உரை மீதான விவாதத்தை எதிா்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ராஜ பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

சத்தீஸ்கரில் 4 மாதங்களில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை!

#Dinamani | வாக்காளர் அட்டை இல்லையா? சத்யபிரத சாகு விளக்கம்

SCROLL FOR NEXT