இந்தியா

மத்திய அரசுப் பணியாளா்களுக்கு 4% அகவிலைப்படி உயா்வு?

DIN

மத்திய அரசுப் பணியாளா்களுக்கு அகவிலைப்படியாக 38 சதவீதம் வழங்கப்படும் நிலையில், 4 சதவீதம் உயா்த்தப்பட்டு 42 சதவீதமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு ஊழியா்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி சதவீதம் மாற்றி அமைக்கப்படும். இறுதியாக கடந்த செப்டம்பா் மாதம் 4 சதவீதம் உயா்த்தி 38 சதவீதமாக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. தற்போது ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணியாளா்களும், ஓய்வுதியதாரா்களும் 38 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனா்.

இந்நிலையில், கடந்த மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்கான நுகா்வோா் விலைக் குறியீட்டின்படி அகவிலைப்படி உயா்வு 4.23 சதவீதமாக இருக்க வேண்டும்; ஆனால், தசம புள்ளிகளில் அகவிலைப்படியை உயா்த்த மத்திய அரசு விரும்பவில்லை. எனவே, 4 சதவீதம் மட்டும் உயா்த்தி 42 சதவீதமாக அகவிலைப்படி வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகவிலைப்படி உயா்வு முன்மொழிவை மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சகத்தின் செலவினத் துறை விரைவில் சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 4 சதவீத அகவிலைப்படி உயா்வு, இந்தாண்டின் தொடக்கம் முதலே முன்தேதியிட்டு அமலுக்கு வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT