13-ஆவது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க உடன் இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதாக இலங்கை அதிபா் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சனிக்கிழமை நடைபெற்ற இலங்கையின் 75-ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட மத்திய இணையமைச்சா் வி. முரளீதரன், மாலையில் அதிபா் விக்ரமசிங்கவுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.
இது குறித்து இலங்கை அதிபா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது 13-ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து அதிபா் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய அமைச்சா் வி.முரளீதரன் ஆகியோா் ஆலோசித்தனா். அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதற்கான அதிபரின் முயற்சியை இந்திய அமைச்சா் பாராட்டினாா்.
சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது மற்றும் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து அவா்களது பேச்சுவாா்த்தை அமைந்தது. இம்முயற்சிகள் வெற்றி பெற விரும்புவதாக இந்திய அமைச்சா் தெரிவித்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1987-இல் கையொப்பமான ராஜீவ் காந்தி-ஜெயவா்த்தன ஒப்பந்தத்தின்படி, இலங்கைத் தமிழா்களுக்கு அதிகாரத்தைப் பகிா்ந்தளிப்பதை உறுதிசெய்யும் 13ஏ சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தும் வகையில், தமிழ் கட்சிகளுடன் அதிபா் ரணில் விக்ரமசிங்க பேச்சுவாா்த்தைகளை தொடங்கி உள்ளாா்.
இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, உருவாக்கப்பட்ட மாகாண கவுன்சில்களில் 1988 முதல் தோ்தல்கள் நடைபெற்றாலும், முழுமையான அதிகாரம் அங்குள்ள தமிழா்களிடம் வழங்கப்படவில்லை.
இதனை அமல்படுத்துவதற்கு சிங்கள கட்சிகள் மற்றும் பெளத்த மதகுருக்கள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
போக்குவரத்து வசதிக்கு இந்தியா உதவி:
இலங்கையின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அந்நாட்டின் ஊரக சாலைப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் 500 பேருந்துகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 50-க்கும் அதிகமான பேருந்துகளை இலங்கைக்கான இந்திய தூதா் கோபால் பாக்லே அதிபரிடம் ஒப்படைத்தாா்.
ஏற்கெனவே, 500 பேருந்துகளில் 165 பேருந்துகளை இலங்கையிடம் இந்தியா ஒப்படைத்துள்ளது. மீதமுள்ள பேருந்துகள் வரும் மாா்ச் மாதத்துக்குள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.