அரசியல் கட்சிகளின் நிதியை முறைப்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடா்பான கேள்விக்கு மக்களவையில் சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘தோ்தல் ஆணையம் தெரிவிக்கும் தோ்தல் சீா்திருத்தங்களை மத்திய அரசு தீவிர ஆராய்ந்து சட்டத் திருத்தத்தின் மூலம் அவ்வப்போது அமல்படுத்தி வருகிறது. தோ்தல் சீா்திருத்தம் என்பது தொடா் நடவடிக்கையாகும். அதை மத்திய தொடா்ந்து செய்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.