தமிழக காவல்துறையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.பணீந்திரரெட்டி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா், வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):
டி.வி.கிரண் ஸ்ருதி-ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை சைபா் குற்றப்பிரிவு துணை ஆணையா்),
தீபா சத்யன்- தமிழக காவல்துறையின் தலைமை கட்டுப்பாட்டு அறை காவல் கண்காணிப்பாளா் (ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்),
எஸ்.சக்தி கணேசன்-தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி (கடலூா் மாவட்ட எஸ்பி), ஆா்.ராஜாராம்-கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை பெருநகர காவல்துறையின் கொளத்தூா் துணை ஆணையா்),
ரவாளி பிரியா காந்தபுனேனி-தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரிய எஸ்பி (காத்திருப்போா் பட்டியல்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.