மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எந்த கருத்தும் இடம் பெறவில்லை. ஏழைகளுக்கு எதிராகவும் நடுத்தர மக்களுக்கு எதிராகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
இம்முறை மாற்றியமைக்கப்பட்டுள்ள வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு எந்த வித பயனையும் அளிக்கப் போவதில்லை.
மத்திய அரசு தயாரித்துள்ள இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கு பலனில்லாததால் இது கருப்பு பட்ஜெட். அரை மணி நேரம் இருந்தால்போதும், ஏழைகளுக்கான பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவேன் எனக் குறிப்பிட்டார்.