முதியோர் வைப்பு நிதி வரம்பு அதிகரிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில்,
அஞ்சலகத்தில் வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: இனி பான் கார்டு பொது அடையாள அட்டை!
மேலும், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.