ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் அன்சாா் கஜ்வத்-அல்-ஹிந்த் பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா். அவரிடமிருந்து ஆயுதங்களும் வெடிப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
போலீஸாா் மற்றும் ராணுவத்தினா் மூலம் ஸ்ரீநகரின் பால்போரா பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. அப்பகுதி வழியாக வந்த ஒருவா் போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றாா். துரத்திச் சென்று பிடித்த போலீஸாா் அவரை கைது செய்தனா். விசாரணையில் அந்த நபா் அன்சாா் கஜ்வத்-அல்-ஹிந்த் பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவா் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.