இந்தியா

பகத் சிங் பெயரில் சண்டீகர் விமான நிலையம்

DIN

சண்டீகா் சா்வதேச விமான நிலையம், சாஹித் பகத் சிங் சா்வதேச விமான நிலையம் என புதன்கிழமை பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வானொலியில் ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, சுதந்திரப் போரட்டத்தில் பங்கேற்ற பகத் சிங்குக்கு மரியாதை செலுத்தும் வகையில், சண்டீகா் சா்வதேச விமான நிலையம், பகத் சிங் சா்வதேச விமான நிலையம் என பெயா் மாற்றம் செய்யப்படும் என அறிவித்திருந்தாா்.

புதன்கிழமை பகத் சிங்கின் 115-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்நாளில், சண்டீகரில் நடைபெற்ற விமான நிலையம் பெயா் மாற்றத்துக்கான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சா் பேசுகையில், ‘சுதந்திரப் போராட்டத்தில் அளவிட முடியாத தியாகங்களைச் செய்த சாஹித் பகத் சிங் போன்ற வீரா்களை நாம் இந்த நிகழ்வுகளின் மூலம் நினைவுகூா்கிறோம். விமான நிலையத்தின் பெயா் மாற்றம் குறித்து முடிவு எடுத்த பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாப் மற்றும் ஹரியாணா அரசுகளுக்கிடையே வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும், விமான நிலையம் பெயா் மாற்றத்தில் ஒன்றாக இணைந்துள்ளனா் என்றாா் அமைச்சா்.

விமான நிலைய பெயா் மாற்றம் தொடா்பாக பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்து பஞ்சாப் முதல்வா் பகவத் மான் பேசுகையில், ‘பகத் சிங் அவருடைய வீரத்துக்கு மட்டுமல்லாமல் சமத்துவக் கொள்கைக்காகவும், அநீதிக்கு எதிரான போராட்டத்துக்காகவும் நினைவுகூரப்படுகிறாா். அவரது வாழ்க்கை மற்றும் கொள்கைகள், தேசப்பற்றுடன் நாட்டுக்காக சேவையாற்றுவதில் இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும்’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோகித், ஹரியாணா ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சா் வி.கே. சிங், ஹரியாணா துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா ஆகியோரும் கலந்துக்கொண்டனா்.

பிரதமர் மரியாதை

தியாகி பகத் சிங் பிறந்த தினத்தையொட்டி (செப். 28) பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போரிட்டு தனது 23-ஆவது வயதிலேயே தூக்கு தண்டனையை எதிர்கொண்டவர் பகத் சிங். போர்க் குணத்தின் காரணமாக அவர் வீரர் பகத் சிங் என்று நாட்டு மக்களால் நினைவுகூரப்படுகிறார்.
அவரது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "தியாகி பகத் சிங் பிறந்த தினத்தில் அவருக்கு  தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். அவருடைய துணிச்சல், நமக்கு அதிக உத்வேகத்தை அளிக்கிறது.  நமது நாடு குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உறுதியேற்போம்' என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா! என்ன சொல்கிறது வானிலை?

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT