இந்தியா

பாகிஸ்தானின் புதிய நிதியமைச்சராக இஷாக் தார் பதவியேற்பு! 

DIN

பாகிஸ்தானின் புதிய நிதியமைச்சராக இஷாக் தார் நான்காவது முறையாக இன்று பதவியேற்றார். 

முன்னாள் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் பிஎம்எல்-என் செனட்டருக்கு வழிவகுப்பதற்காக தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போது, ​​பிஎம்எல்-என் தலைவர் நவாஸ் ஷெரீப், பிரதமர் ஷெஹ்பாஸ் ஆகியோரால் நிதி அமைச்சராக தார் பரிந்துரைக்கப்பட்டார்.  இதற்கு முன்னதாக மூன்று முறை தார் நிதியமைச்சராகப் பதவி வகித்துள்ளார். 

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தார், அந்த வழக்கில் இருந்து தப்பிக்க லண்டனில் சுமார் 5 ஆண்டுகளாக வசித்து வந்தார்.  இந்நிலையில், தார் பஞ்சாபிலிருந்து செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் நாட்டில் இல்லாததால் பதவியேற்க முடியவில்லை.

புதிய நிதியமைச்சரின் நியமனம் பல மாதங்களாகப் பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்குப் பிறகு, ரூபாய் மதிப்பிழப்பு மற்றும் பணவீக்கத்தை முடக்கியது. இது தாருக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

33 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து, 40 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இழப்பை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு மீள்வது அவருக்கு மற்றொரு கடினமான சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT