இந்தியா

உத்தரகண்ட்: அங்கிதா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

DIN


டேஹ்ராடூன்: உத்தரகண்ட் விடுதியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் அங்கிதா பந்தாரியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், மாநில அரசு, அங்கிதாவின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்கும். அனைத்து வழிகளிலும் குடும்பத்தினருக்கு உதவும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் நேர்மையான முறையில், துரிதமாக விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், காவல்துறையினரும், இந்த விடுதி மற்றும் அங்கு நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டி வருகிறார்கள். இதன் மூலம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்தார்.

இந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையானது எதிர்காலத்தில் இதுபோன்ற தவறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறும். வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை தர நீதிமன்றத்தை வலியுறுத்துவோம் என்றும் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT