நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,615 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 22 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 4,972 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 40,979-ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,28,584ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 9 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,87,533 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 217.96 கோடி தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.72 சதவிகிதமாக உள்ளது.