இந்தியா

நாட்டில் புதிதாக 3,615 பேருக்கு கரோனா; 22 பேர் பலி

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,615 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 22 பேர் உயிரிழந்தனர். 

மேலும்,  4,972 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 40,979-ஆக குறைந்துள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,28,584ஆக அதிகரித்துள்ளது. 

இன்று காலை 9 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,87,533 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 217.96 கோடி தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.72 சதவிகிதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன்: சத்யபிரத சாகு

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

தூத்துக்குடி: பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT