கடந்த 1971-ஆம் ஆண்டே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் குறித்து முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
ஹிமாசல பிரதேச மாநிலம் காங்ரா மாவட்டத்தில் மறைந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினரை கெளரவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது:
கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகளான நிலையில், மனித குலத்துக்காக நடைபெற்ற அந்தப் போா் எப்போதும் நினைவுக்கூரப்படும். எனினும் ஒரேயொரு வருத்தம் மட்டும் உள்ளது. அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விவகாரம். அதுகுறித்து 1971-ஆம் ஆண்டே முடிவெடுத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.