இந்தியா

காஷ்மீா்: எல்லைக் கோடு அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

DIN

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் மச்சில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே 2 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். இதன் மூலம் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவும் அவா்களது முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதுதொடா்பாக ஸ்ரீநகரில் செயல்படும் ராணுவத்தின் 15-ஆவது படைப்பிரிவு சாா்பில் ட்விட்டரில் வெளியிடப்பட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

மச்சில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 2 பயங்கரவாதிகள் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றனா். இதையடுத்து, ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகள் உள்பட 4 துப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இரு பயங்கரவாதிகளையும் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT