ஒற்றுமைக்கான நடைப்பயணத்தின் போது சிறுவர்களுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கால்பந்து விளையாடும் விடியோ வைரலாகி வருகின்றது.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை பாலக்காடு மாவட்டத்தில் இருந்து நடைப்பயணம் தொடங்கிய நிலையில், கால்பந்துகளுடன் சிறுவர்களும் ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.
சிறுவர்கள் அனைவரும் கால்பந்து விளையாடிக் கொண்டே நடைப்பயணம் மேற்கொண்ட நிலையில், அவர்களுடன் ராகுல் காந்தி கால்பந்து விளையாடினார். அந்த விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இதையும் படிக்க | 2வது நாளாக குறைந்த கச்சா எண்ணெய்: குறையாத பெட்ரோல், டீசல் விலை
மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.