இந்தியா

காணாமல் போன 5 வயது சிறுவனின் உடல் பக்கத்து வீட்டில் மீட்பு: வெடித்தது வன்முறை

DIN


போல்பூர்: மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் மூன்று நாள்களுக்கு முன்பு காணாமல் போன 5 வயது சிறுவனின் உடல், பக்கத்து வீட்டிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் அங்கு வன்முறை வெடித்துள்ளது.

மோல்டங்கா கிராமத்தில், 5 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனான். அவனை குடும்பத்தினர் தேடி வந்தனர். சிறுவன் காணாமல் போனதிலிருந்தே அந்த கிராமத்தில் பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில், சிறுவனின் பக்கத்து வீட்டிலிருந்து திங்கள்கிழமை இரவு முதல் துர்நாற்றம் வீசியது குறித்து கிராம மக்கள் காவல்நிலையத்துக்குப் புகார் அளித்தனர்.

செவ்வாயன்று அந்த வீட்டுக்கு வந்த காவல்துறையினர், வீட்டின் பரண் மேல், பாலிதீன் பை சுற்றிய நிலையில், சிறுவனின் உடலை கண்டெடுத்தனர். உடனடியாக சிறுவனின் உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அந்த வீட்டில் வசித்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் உறவினர்கள் உள்பட கிராமத்தினர், அப்பெண்ணின் வீட்டை சூறையாடியதால், அப்பகுதியில் வன்முறை வெடித்தது.

ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிறுவனின் மரணத்துக்குக் காரணம் என்ன, இந்த கொலையின் பின்னணியில் இருக்கும் பகை என்ன என்பது குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தென் சென்னையில் தமிழிசை, கரூரில் அண்ணாமலை போட்டியா?

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

கேரள மீனவர்களை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி பெண் தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

SCROLL FOR NEXT