புது தில்லி: வடக்கு தில்லியின் ஆசாத் சந்தையில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் தில்லியில் உள்ள ஆசாத் சந்தையில் இன்று காலை 8.30 மணிக்கு எதிர்பாராதவிதமாகக் கட்டுமானத்தில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்தனர். மேலும் 5 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
படிக்க: திருமணத் தடை நீக்கும் திருநாராயணபுரம் வேதநாராயணப் பெருமாள்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
அதிக சுமை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. கட்டட விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணி தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.