இந்தியா

பாகிஸ்தான் சிறையில் ஒன்பது மாதங்களில் 6 இந்திய கைதிகள் உயிரிழப்பு

DIN

பாகிஸ்தான் சிறையில் கடந்த ஒன்பது மாதங்களில் 6 இந்திய கைதிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சமீப காலமாக மீனவர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 6 இந்திய கைதிகளில் 5 மீனவர்கள் பாகிஸ்தான் காவலில் உயிரிழந்துள்ளனர். 

அவர்கள் அனைவரும் தண்டனையை நிறைவு செய்தவர்கள்.

ஆனால் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் கவலையளிக்கின்றன. இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள எங்கள் உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர். 

அந்த நாட்டில் உள்ள இந்திய கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது பாகிஸ்தானின் பொறுப்பு. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT