பாகிஸ்தான் சிறையில் கடந்த ஒன்பது மாதங்களில் 6 இந்திய கைதிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சமீப காலமாக மீனவர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. 6 இந்திய கைதிகளில் 5 மீனவர்கள் பாகிஸ்தான் காவலில் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் தண்டனையை நிறைவு செய்தவர்கள்.
ஆனால் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் கவலையளிக்கின்றன. இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள எங்கள் உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.
இதையும் படிக்க- வாட்ஸ்ஆப்பில் வருகிறது புதிய வசதி
அந்த நாட்டில் உள்ள இந்திய கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது பாகிஸ்தானின் பொறுப்பு. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.