தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை மேலும் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.
முந்தைய தினமான புதன்கிழமை 2,606 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 57 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தில்லியில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,03,803-ஆக உயா்ந்துள்ளது; 26,503 போ் உயிரிழந்துள்ளனா். வியாழக்கிழமை பாதிப்பின் நோ்மறை வீதம் 2.19 சதவீதமாக பதிவானது.