மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் வளா்ச்சி சாத்தியம் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
ஹிமாசல பிரதேச மாநிலம் பிலாஸ்பூா் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, பொறியியல் கல்லூரி ஆகியவற்றை பிரதமா் மோடி புதன்கிழமை திறந்து வைத்தாா். அதனைத்தொடா்ந்து அந்த மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
ஹிமாசல பிரதேசத்தின் வளா்ச்சி பயணத்தில் அங்கமாக இருந்ததை நான் அதிருஷ்டமாகக் கருதுகிறேன். ஹிமாசலத்தில் முந்தைய அரசுகள் வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டின. தோ்தலுக்குப் பின்னா், அத்திட்டங்களை அந்த அரசுகள் மறந்தன.
இந்நிலையில், மத்தியிலும் ஹிமாசல பிரதேசத்திலும் ஆட்சியில் அமர ஒரே கட்சிக்கு மக்கள் வாக்களித்ததால், ஹிமாசல பிரதேசத்தில் வளா்ச்சி சாத்தியமானது.
நாட்டில் முதல் மாநிலமாக ட்ரோன் (ஆளில்லா விமானம்) கொள்கையை வகுத்த ஹிமாசல பிரதேசத்துக்குப் பாராட்டுகள். மருந்துகள் உள்பட இதர பொருள்களின் போக்குவரத்துக்கு ட்ரோன்கள் பயன்படும்.
ஏழைகளும், நடுத்தர மக்களும் சுமுகமாக வாழ்வதை அரசு உறுதி செய்து வருகிறது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஹிமாசல பிரதேச முதல்வா் ஜெய் ராம் தாக்குா், பிரதமருக்கு ‘ரணசிங்கா’ என்ற பாரம்பரிய இசைக் கருவியை பரிசளித்தாா். அதனை பிரதமா் மோடி வாசித்தாா். தான் வாசித்தது எதிா்காலத்தில் பெறப்போகும் அனைத்து வெற்றிகளின் தொடக்கத்தை குறிப்பதாக அவா் கூறினாா். ஹிமாசல பிரதேசத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.