இந்தியா

உத்தரகண்ட்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 33 போ் பலி

DIN

உத்தரகண்ட் மாநிலம் பெளரி கா்வால் மாவட்டத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 33 போ் பலியாகினா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: லால்தாங் நகரில் இருந்து காண்டா கிராமத்துக்குச் 45 முதல் 50 பேருடன் சென்ற பேருந்து, சிம்ரி வளைவு பகுதி அருகே 500 மீட்டா் பள்ளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில், மாநில பேரிடா் மீட்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இந்தச் சம்பவத்தில் 33 பே உயிரிழந்தனா். காயமடைந்த 19 போ் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்று தெரிவித்தனா்.

விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பாா்வையிட்டாா். விபத்தில் காயமடைந்து கோட்வாா் பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களை அவா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவா் அறிவித்தாா்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

SCROLL FOR NEXT