சட்ட விரோத கும்பல்களால் கம்போடியாவில் கடத்தப்பட்ட 14 நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டில் நடந்தது போலவே கம்போடியாவிலும் போலி வேலைவாய்ப்பு நடப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லாவோஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இதேபோன்ற மோசடியில் இந்தியர்கள் சிக்கியிருப்பதாக அரிந்தம் பக்சி தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து மாநில அரசுகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கம்போடியா மற்றும் லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரங்களில் மூலம் வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.