இந்தியா

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு சூழல்: அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

DIN

ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

ஜம்மு - காஷ்மீர் சிறைத் துறை டிஜிபி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று ஜம்மு, ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களில் இணையதள சேவைகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டன. 

இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். 

நேற்று, ரஜோரி மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீ நகரில் ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு சூழல் குறித்து  அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். 

ஜம்மு - காஷ்மீரில் அரசியல் நிலவரம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT