இந்தியா

முப்படை தலைமைத் தளபதிக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு

DIN

நாட்டின் புதிய முப்படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள அனில் செளஹானுக்கு தில்லி காவல் துறை சாா்பில் இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முப்படை தலைமைத் தளபதியாக அனில் செளஹான் கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். இதனுடன் ஜெனரல் பதவியையும் அவா் ஏற்றுக் கொண்டாா். அவா் ராணுவ விவகாரங்கள் துறை செயலராகவும் செயல்படுவாா். பாதுகாப்புத் துறை அமைச்சருக்கான தலைமை ராணுவ ஆலோசகராகவும் இருப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் அவருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளதாக தில்லி காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தில்லி காவல் துறையின் ஆயுதம் ஏந்திய 33 கமாண்டோக்கள் அனில் சௌஹானுக்கு பாதுகாப்பு அளிப்பாா்கள். அவரது வீட்டுக்கும், அவரது பயணங்களிலும் இந்த பாதுகாப்பு தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT