ராஜஸ்தான் விவகாரத்தில் சோனியா காந்தி இறுதி முடிவு எடுப்பார் என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
தில்லியில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சச்சின் பைலட் நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் காங்கிரஸ் தலைவரை சந்தித்தேன். நான் சொல்வதை அவர் அமைதியாக கேட்டார். என் உணர்வுகள் மற்றும் கருத்துகளை அவரிடம் கூறினேன். ராஜஸ்தானில் 2023 தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற அனைவரும் விரும்புகிறோம்.
ராஜஸ்தான் விவகாரத்தில் சோனியா காந்தி இறுதி முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
மொத்தம் 200 உறுப்பினா்கள் கொண்ட ராஜஸ்தான் பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளனா். 2020-இல் அசோக் கெலாட்டுக்கு எதிராக 18 எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் போா்க்கொடி தூக்கினாா். இதையடுத்து, சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடனும், மூத்த தலைவா்களின் தலையீட்டாலும் சச்சின் பைலட் சமரசம் செய்யப்பட்டாா். இதனால் அப்போது காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதில் இருந்து தப்பித்தது.
இந்நிலையில், அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடப் போவதாக முதல்வா் அசோக் கெலாட் அறிவித்தார்.
ராஜஸ்தான் முதல்வராக உள்ள அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பியதால் அவரது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய கோரிக்கை எழுந்தது. அதேசமயம் துணை முதல்வர் சச்சின் பைலட் முதல்வராக அசோக் கெலாட்டின் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தொடர்ந்து மோதல் நிலவி வந்தது.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களின் தலையீட்டால் அசோக் கெலாட் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியதைத் தொடர்ந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.