இந்தியா

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நியமனம்!

DIN

புது தில்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையராக அஜய் பாது நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார், துணை ஆணையராக ஆர்.கே.குப்தா பணியாற்றி வரும் நிலையில், தற்போது அஜய் பாது துணை ஆணையராக நியமனம் செய்ய மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. 

கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். 

குஜராத்தில் மாவட்ட ஆட்சியராகவும்,  வதோதரா நகராட்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சிறந்த செயல்பாட்டிற்காக இரண்டு முறை சிறந்த ஆட்சியர் விருதை பெற்றுள்ளார்.

ஜூலை 2020 இல் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் இணைச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT