மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் கேரள அமைச்சருமான கொடியேறி பாலகிருஷ்ணன் சனிக்கிழமை காலமானார்.
கேரளத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதன் காரணமாக தான் பொறுப்பு வகித்த கேரள மாநில செயலாளர் பதவியிலிருந்து விலகினார்.
இதையும் படிக்க | 26 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராகும் தென்மாநிலத்தவர்
இந்நிலையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த கொடியேரி பாலகிருஷ்ணன் சனிக்கிழமை காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.