இந்தியா

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம்

DIN

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு சனிக்கிழமையன்று இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் பக்கத்துக்குச் சென்று பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ பக்கத்தைத் தேடினால், சட்டரீதியான கோரிக்கையை அடுத்து, இந்தியாவில் இப்பக்கம் முடக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதன் பின்னணியில், எந்த விதமான செயல்பாடு உள்ளது இதுவரை தெளிவாகத் தெரியவரவில்லை.

உள்நாட்டு சட்டங்களை மீறும் வகையில் கருத்துகள் இடம்பெற்றதால், மத்திய அரசு அதிகாரிகளிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கையை ஏற்று, டிவிட்டர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT