நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி ஒன்றிற்கு பார்வையிட சென்ற அவர் இதனை தெரிவித்தார். பள்ளிகள் மாணவர்களை வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலைவாய்ப்பினை உருவாக்குபவர்களாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
குழந்தைகளின் கல்வி குறித்து அவர் பேசியதாவது: “ உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா மாற வேண்டும் எனில், நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். குழந்தைகள் தொழிலதிபர்கள் ஆகவும், வேலைவாய்ப்பினை உருவாக்குபவர்களாகவும் மாற நாம் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். தில்லி அரசு மாணவர்களுக்கு தரமான கல்வியினை வழங்குவதற்கு பல்வேறு கடின முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனை இலவசமாகவும் வழங்கி வருகிறது.
இதையும் படிக்க: சமந்தாவின் சாகுந்தலம்: ரிலீஸ் தேதி மாற்றம்!
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் எனக்கும் ஒரு கனவு உள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அந்த கனவு. அவர்களுக்கு உலகத் தரத்தில் கல்வியினை இலவசமாக வழங்க வேண்டும். நாங்கள் அதற்காக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.