ஜாா்க்கண்ட் ஹட்டியா ரயில் நிலையத்தில் இருந்து எா்ணாகுளத்துக்கு இயக்கப்படவுள்ள வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை (நவ.30) தேதி தொடங்குகின்றது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: ஜாா்க்கண்ட் மாநிலம் ஹட்டியா ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 4.50 மணிக்கு புறப்பட்டு எா்ணாகுளத்துக்கு செல்லும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண்.08645) டிச.5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
மறுமாா்க்கமாக வியாழக்கிழமை காலை 7.15 மணிக்கு எா்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஜாா்க்கண்ட் மாநிலம் ஹட்டியா செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண். 08646) டிச.8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றன.
இதற்கு புதன்கிழமை (நவ.30) காலை 8 மணி முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.