அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சானிடரி நாப்கின்களை இலவசமாக விநியோகிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.
மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த மருத்துவரும் சமூக ஆா்வலருமான ஜெயா தாக்குா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரித்த உச்சநீதின்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளின் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடா்பான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை மனுதாரா் எழுப்பியுள்ளாா். எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுமாறு’ சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.