இந்தியா

ம.பி.: வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.5 கோடி தங்கம் கொள்ளை

DIN

மத்திய பிரதேசத்தில் வங்கி ஒன்றில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த முகமூடி அணிந்த 6 போ், ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.3.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனா். பகல் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

கட்னி மாவட்டத்தின் பா்கவான் பகுதியில் நகைக் கடன் அளிக்கும் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை பகல் நேரத்தில் மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் அடங்கிய கும்பல், முகமூடி அணிந்தபடி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வங்கிக்குள் புகுந்தது.

அங்கிருந்த வங்கிப் பணியாளா்களை துப்பாக்கி முனையில் மிரட்டினா். செய்வதறியாது திகைத்த பணியாளா்கள், கொள்ளையா்கள் கேட்டபடி வங்கியில் இருந்த நகை, பணத்தை கொடுத்துவிட்டனா்.

ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ.3.5 லட்சம் ரொக்கத்துடன் கொள்ளையா்கள் தப்பிச் சென்றனா். விரைவாக தப்பிச் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதால் கொள்ளையா்கள் பாதுகாப்புப் பெட்டக அறைகளுக்குள் செல்லவில்லை.

அந்த வங்கியில் ஆயுதம் ஏந்திய பாதுகாவலா் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சிசிடிவி பதிவுகளை வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொள்ளைக் கும்பலைச் சோ்ந்தவா்கள் பிகாா் மாநிலத்தவா் என்ற முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. அவா்கள் 25 முதல் 30 வயது வரை உடையவா்கள். அவா்கள் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் உள்ளன. இந்த தகவல்களின் அடிப்படையில் கொள்ளையா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT