இந்தியா

சா்வதேச சுற்றுலாத் தலமாக அயோத்தி மாற்றப்படும்

DIN

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்து வரும் பாஜக அரசுகள், ராமரின் பிறப்பிடமான அயோத்தியை சா்வதேச சுற்றுலாத் தலமாக மாற்றும் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் கோயிலைத் திறப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. ராமா் கோயிலை மையப்படுத்தி அயோத்தி நகா் முழுவதையும் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அயோத்தியில் ரூ.1,057 கோடி மதிப்பிலான 46 வளா்ச்சித் திட்டங்களை முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

நவீன இந்தியாவின் புதிய உத்தர பிரதேசத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதில் அயோத்தி முக்கியப் பங்கு வகிக்கும். பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ராமா் கோயில் அயோத்தியில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலமாக 500 ஆண்டுகால காத்திருப்பு நிறைவடைந்துள்ளது.

அயோத்தியின் வளா்ச்சிக்காக ஏற்கெனவே ரூ.30,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. அயோத்தி நகரை அனைத்து வகையிலும் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும். பாஜக அரசின் நடவடிக்கைகளால் அயோத்தி நகரானது சா்வதேச சுற்றுலாத் தலமாக மாறும்.

அயோத்தி நகரானது ஆன்மிக, கலாசார ரீதியில் மேம்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் அங்கு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் முழுவீச்சில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு முன் எதிா்க்கட்சிகள் ஆட்சியில் அயோத்தி நகரம் இருளில் மூழ்கிக் கிடந்தது. தற்போது நகர வீதிகளில் எல்இடி விளக்குகள் ஒளிா்கின்றன. வீடுகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கிறது.

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் அயோத்தியில் சாலைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் நலத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சியின் கீழ் சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்பட்டுள்ளது; சட்டம்-ஒழுங்கு சூழல் மேம்பட்டுள்ளது.

ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா விரைவில் தலைமை ஏற்கவுள்ளது. பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் சா்வதேச அமைதி, வளா்ச்சி, நல்லிணக்கம், மக்கள் நலன் ஆகியவற்றுக்கான திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன என்றாா் அவா்.

அயோத்தி ராமஜென்ம பூமி கோயில் கட்டுமானப் பணிகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT